ஆக. 9ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

63பார்த்தது
ஆக. 9ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
தூத்துக்குடியில் வருகின்ற ஆக. 9ஆம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 09. 08. 2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10. 30 மணி அளவில் கோரம்பள்ளத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.

மேலும், இம்முகாமில் வேலையளிக்கும்(Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய கலந்து கொள்ளலாம் எனவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, DIPLOMA, I. T. I. , டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரியவிருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரம் (Bio data) மற்றும் கல்விசான்றுகளுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி