தூத்துக்குடி: மே 13ஆம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்

79பார்த்தது
தூத்துக்குடி: மே 13ஆம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்
தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 13.05.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் நடைபெறவிருக்கிறது.

தொடர்புடைய செய்தி