தூத்துக்குடி: கூடுதல் விமான சேவை தொடக்கம்; கால அட்டவணை வெளியீடு

50பார்த்தது
தூத்துக்குடி: கூடுதல் விமான சேவை தொடக்கம்; கால அட்டவணை வெளியீடு
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. 

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தற்போது, இரு வழித்தடங்களில் நாளொன்றுக்கு 8 விமான சேவைகளும், திருச்சிக்கு 14 விமான சேவைகளும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை - தூத்துக்குடி இடையே 12 சேவைகளாகவும், சென்னை - திருச்சி இடையே 22 சேவைகளாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 30ஆம் தேதி முதல் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி