தூத்துக்குடி: தனிப்படை காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

57பார்த்தது
தூத்துக்குடி: தனிப்படை காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு
பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்துவந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார். 

நாலாட்டின்புதூர் காவல் நிலையை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை கடந்த (07.06.2025) கைது செய்தனர். 

மேற்படி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த மேற்படி தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (09.06.2025) சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி