தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் சுடலைவேல் (23). தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, சுடலைவேலை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.