திருவாரூர்: ஆளுநரை கண்டித்து திருவாரூர் ரயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதித்த ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்தும் அதிமுக பாஜக கள்ள கூட்டணியை கண்டித்து மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் அத்துமீரும் ஆளுநரையும் அதற்கு துணை போகும் அதிமுக பாஜகவினரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திமுக மாவட்ட அவை தலைவர் தன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை ஈடுபட்டனர் மாவட்டம் முழுவதும் இருந்து ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுநரை கண்டித்தும் அதிமுக பாஜகவினரை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி