விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. "பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இப்கோ டோக்கியோ நிறுவனமானது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. "
"இந்த திட்டத்தில் சம்பா நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 529 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று விண்ணப்பபடிவம், முன்மொழிவுபடிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ, பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு பிரீமியம் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.