திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் சங்க பிரநிதிகள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அரசு கூடுதல் தலைமை செயலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாத நிலையில் நிரந்தர கட்டிடங்கள் நெல் கொள்முதல் நிலைங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ. 20. 90 கோடியில் மன்னார்குடி மூவாநல்லூர் கிராமத்தில் 33 ஆயிரம் மெ. டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு லஞ்சம் என்கிற நிலை மாறுமா? என்ற கேள்விக்கு பதிலாளித்த அவர் தொடர் சவாலாகதான் இருந்து வருகிறது. அதற்கான தனியாக விஜிலென்ஸ் கூட அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டருக்கு புகார் தெரிவிக்க வசதி ஏற்படுத்தியுள்ளோம்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரஸ்ரீ ஒன்றிய பெருந்தலைவர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர.