திருவாரூர்: ராணுவ வீரர்களுக்காக அதிமுகவினர் வழிபாடு

52பார்த்தது
திருவாரூர்: ராணுவ வீரர்களுக்காக அதிமுகவினர் வழிபாடு
புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் இந்திய எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள் நலன் பெற வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் காமராஜ், அமைப்பு செயலாளர் சிவா. ராஜமாணிக்கம் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி