தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் 20 நாட்கள் நடைபெறும் பகல்பத்து ராப்பத்து உற்சவம் இன்று தொடங்கியது. பகல் 10 உற்சவத்தில் முதல் நாளான இன்று ராஜகோபால சுவாமி ருக்மணி சத்தியபாமா உடன் ஆலயத்தின் உள் பிரகாரத்தில் எழுந்தருளி வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது.