தமிழர்களின் வாழ்வோடு தொடர்புடைய பொங்கல் விழாவில் மஞ்சள் இஞ்சி வாழைப்பழம் இவற்றோடு கரும்பும் முக்கிய இடம் வகிக்கும் பொருளாகும். அந்த வகையில் நீடாமங்கலம் ஆதனூர் மண்டபம் சுற்றுவட்டார கிராமங்களில் சம்பா காலடி பயிர்களோடு பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பும் நடவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு 15 நாட்களுக்கும் குறைவான தினங்களில் உள்ளதால் நன்கு வளர்ந்த கரும்புகள் சாயாமல் இருக்க வேர்ப்பகுதியில் மண் அணைத்தல் தோகைகளை குறித்து தூய்மை செய்யும் பணியில் விவசாயிகள் விபரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசும் தனியார் வியாபாரிகளும் அதிக விலைக்கு கரும்புகளை வாங்கிச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.