ஆயுதப்படை காவலர்களின் யோகா பயிற்சியை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (07. 06. 2024) நடைபெற்ற யோகா பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், M. Sc, (Agri). , அவர்கள், பார்வையிட்டு யோகா பயிற்சிகள் குறித்தும், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அரசு குடியிருப்பு வேண்டி விண்ணப்பித்திருந்த காவலர்களுக்கு, குலுக்கல் முறையில் அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்தார்கள்.
மேலும், அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள்.
அப்போது, திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு ஆயுதப்படை) திரு. P. மணிகண்டன் அவர்கள் உடனிருந்தார்கள்.