திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்னல் இடியுடன் மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் மின்னல், இடி மற்றும் காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகளும் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.