திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ரூ.20 லட்சம் மதிப்பிலான 150 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 204 கொள்ளை வழக்குகளில் 378 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.81 லட்சத்தில் 72 சதவீதம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.