உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆகியவை இணைந்து மரக்கன்றுகளை நட்டன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுக்கு ஆராய்ச்சி மையத் தலைவா் ப. அழகிரிசாமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தியாகராஜன், இணைச்செயலாளா் காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஜிஆா்எம் பள்ளிக்குழுமத் தாளாளா் பாலசுப்ரமணியன் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டாா்.
சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் விஜய், ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், உதவி இயக்குநா்கள் ரவிச்சந்திரன், தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.