அரசவணங்காட்டில் 48 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற விழா

52பார்த்தது
அரசவனங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன், பிடாரியம்மன் ஆலயத்தில் கடந்த சித்திரை 19-ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் செய்து விழா துவங்கியது. கணபதி ஹோமம் மற்றும் சக்தி கரகம் பிரகார வலத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
அதனை தொடர்ந்து சித்திரை மாதம் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ அரியநாயகி எனும் பிடாரியம்மன் சுமார் 48 வருடங்களுக்கு பிறகு புறப்பட்டு அரசவனங்காடு கிராம எல்லைகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் கொடியேற்றம் நிகழ்ச்சியும்நடைபெற்றது. சித்திரை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் புறப்பட்டு மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க இளைஞர்கள் நடனத்துடன் வான வேடிக்கையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அங்கிருந்து புறப்பட்டு அக்ரஹாரம், பெரியகுளம், ஓடக்கரை, தோப்பு தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு வீதிகளை கடந்து ஆலயத்தை வந்து அடைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி