திருவாரூரில் 2.19 கோடியில் புதை வடமின் பாதை திட்டம் தொடக்கம்

76பார்த்தது
திருவாரூர் ஆழிதேரோடும் வீதிகளில் தேர் திருவிழாவின் போது மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானதால் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன்படி தேரோடும் 4 வீதிகளிலும் புதைவிடம் மின்மாற்றி அமைத்திட ரூபாய் 2 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க ஆணை பிறப்பித்ததன்படி திருவாரூர் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி என நான்கு வீதிகளிலும் மின்பாதையை புதைவிடம் மின்பாதையாக மாற்றும் பணி தொடங்கி சாலை ஓரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.

 திருவாரூர் மின்பகிர்மான வட்டம் சார்பில் தேரோடும் நான்கு வீதிகளில் நிறைவடைந்த பணிகளை கீழவீதியில் புதைவிடம் மின்பாதை மற்றும் மின்மாற்றியினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து ரிப்பன்வெட்டி புதைவிடம் மின்இணைப்பை துவக்கிவைத்தனர். இதில் மேற்பார்வை பொறியாளர் லதாமகேஸ்வரி, செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி, செயற்பொறியாளர் பொது காளிதாஸ் மற்றும் பொறியாளர்கள், பணியாளர்கள், நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நியமனகுழு உறுப்பினர் வாரை பிரகாஷ் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி