மயிலாடுதுறையில் கிளை சிறையில் தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி கில்லி பிரகாஷ் மயிலாடுதுறை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது சகோதரர் முரளி மருத்துவமனை வாயிலில் காவலர்கள் தனது அண்ணனை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.