ஆலங்கோட்டையில் நிறுவனர் தின விழாவில் நலத்திட்ட உதவிகள்

76பார்த்தது
ஆலங்கோட்டையில் நிறுவனர் தின விழாவில் நலத்திட்ட உதவிகள்
மன்னர்குடியை அடுத்த ஆலங்கோட்டையில் ஸ்கார்டு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அன்பரசு அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, மரக்கன்று வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்கார்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் கௌசல்யா அன்பரசு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன், திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி எஸ்எம்டி குழுமங்களின் நிறுவனரும் வர்த்தக சங்க மாவட்ட பொருளாளரும் ஆன SMT. கருணாநிதி அவர்கள் மற்றும் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆர் வி ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அலுவலர் விஜயராகவன் வரவேற்புரையாற்றினார், அலுவலர் கனகதுர்கா நன்றியுரையாற்றினார். நிகழ்வில், அலுவலர்கள், பயிற்றுனர்கள், பயனாளிகள், கிராம கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி