மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா

57பார்த்தது
மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கணக்கன் தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆம் தேதி திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. இன்று காலை ஹரித்ரா நதி தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம், செடில் காவடிகளை எடுத்து ஊர்வலமாக வந்தனர். 

மன்னார்குடியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும் ஏழை மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஏழை மாரியம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 11 ஆம் தேதி விடையாற்றி விழா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி