l
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்கண்ண மங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயம்108 திவ்ய தேசங்களில் 27 வது திவ்ய விளங்குகிறது.
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான அருள்மிகு ஶ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீபக்தவசல பெருமாள் ஆலயத்தில் சித்திரை பிரம்மோத்ஸவம் இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி உற்சவர் சீனிவாசபெருமாள் வைரகீரிடம் அணிந்து கிளிதடி கையில் ஏந்தி உற்சவர் அலங்காரம் செய்யப்பட்டு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினார். பிறகு உற்சவ பெருமாளுக்கு தீபரதனை நடைப்பெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கருடபகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க துவராயோகணம் எனும் கொடி ஏற்றம் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருடசேவை வரும் 18ஆம் தேதியும் , சித்திரை தேரோட்டம் வருகிற 23 ஆம் தேதியும் நடைப்பெறுகிறது.