பொன்னேரி அரசு மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு நோயாளிகள் அவதி ஆட்சியர் ஆய்வு செய்தபோது கரண்ட் கட் ஆனதால் செல்போன் வெளிச்சத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிரதாப்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை தலைமை மருத்துவர் கல்பனா இணை இயக்குனர் ஊரக நலப்பணி மற்றும் மருத்துவம் மருத்துவர் அம்பிகா ஆகியோரிடம் விவரங்களை கேட்டு அறிந்தார் ஆட்சியர் ஆய்வு செய்தபோது மருத்துவமனைக்கு வரும் மின்விநியோகம் தடை பட்டதால் செல்போன் டார்ச் லைட்டில் வரும் வெளிச்சத்தில் மருத்துவர்களிடம் ஆய்வை தொடர்ந்து விவரங்களை கேட்டு அறிந்தார் பின்னர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை மருத்துவமனைக்கு வர வைத்து மின்தடைப் பிரச்சனையை சரி செய்தனர் தமிழகத்திலேயே தலைசிறந்த மருத்துவமனையாக பொன்னேரி மருத்துவமனை திகழ்கிறது என்றும் எந்த சிகிச்சைக்கு வந்தாலும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் கல்பனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்