தீப்பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்: கிராம மக்கள் கோரிக்கை

53பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே அமைந்த உயரழுத்த மின்சாரம் செல்லக்கூடிய மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததுடன் பொதுமக்கள் மண்ணைக் கொட்டியும் தண்ணீரை ஊற்றியும் அணைத்தனர். குடியிருப்புகள் அரசு பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேல்நல்லாத்தூர் சுற்று வட்டாரங்களில் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. கேட்டர்பில்லர் கனரக வாகன தனியார் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய தொழிற்சாலைகள் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள நிலையில் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றுவரும் நிலையில் மின்மாற்றி திடீரென தீப்பற்றி எரிந்த பொதுமக்கள் இருளில் தவிக்க நேர்ந்தது. பழைய மின்கம்பிகள் பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவர்களை உடனடியாக மாற்றி முறையாக மின்மாற்றிகளை பராமரிக்க வேண்டும் எனவும் சீரான மின் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி