வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

65பார்த்தது
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பேரூராட்சி, திருவள்ளூர் நகராட்சி, பூண்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளில் இன்று பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் திரு. வி. இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரிஷப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மாஹின் அபுபக்கர், மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி