சந்திராயன் 3 கடந்த ஆண்டு நிலவில் நிலை நிறுத்தப்பட்டது. இதையொட்டி ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் அறிவித்து இருந்தார். அந்த வகையில் இந்திய விண்வெளி மையம் சார்பில் தேசிய விண்வெளி தினத்தை திருவள்ளூர் அருகே அரண் வாயில் பகுதியில் அமைந்துள்ள
பிரத்தியுஷா பொறியியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
இதில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம், அறிவியல் கண்காட்சி, விண்வெளி தொடர்பான தகவல்கள், ரோபோட்டிக்ஸ் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனை உணவுக் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சதிஷ்தவான் விண்வெளி மைய இயக்குனர் ராஜராஜன் துவக்கி வைத்தனர். இதில்
எஸ். எஸ்
. எல். வி, பி. எஸ். எல். வி, மார்க் 3 மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை
அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். அதேபோல் இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.