அனைத்துதுறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை கூட்டம்

61பார்த்தது
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர் மற்றும் ஆட்சியர் பிரதாப் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் டி. ஜே. கோவிந்தராஜன்,
துரை சந்திரசேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது
அனைத்து துறை அலுவலர்களும்
மேற்கொள்ள வேண்டிய பணிகளை குறித்து, முன்னேற்பாடுகளை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அடிக்கல் நாட்டி வைப்பதற்கான திட்டப்பணிகள் குறித்தும், முடிவுற்ற திட்டபணிகளை குறித்தும், நேரத்தில் விழா நேரத்திற்கு விழா மேடைக்கு பயனாளிகளை சரியான நேரத்தில் அழைத்து வருவது குறித்தும், பயனாளிகளுக்கான நலத்திட்டங்களை அன்றே வழங்கப்படுவது குறித்தும், அவர்கள் தேவையான உணவுகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்பாடுகளை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், அனைத்து துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செயல்பட்டு விழாவினை சிறப்பு செய்ய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா. மு. நாசர், அறிவுரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி