திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சியில் காமராஜர் துறைமுக சமூக மேம்பாட்டு வளர்ச்சி நிதி
1 கோடி ரூபாய் மதிப்பில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் குழாய் இணைப்பு பணிகள் மற்றும்
காட்டுப்பள்ளி
ஊராட்சியில் 1 கோடி மதிப்பில் சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கதிர்வேல்
சுகந்திவடிவேல் திமுக மாணவரணி துணை அமைப்பாளர் காட்டுப்பள்ளி துணைத்தலைவர் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்
பின்னர் கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் மோர் பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி சிறப்பித்தனர்
பின்னர் அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்
பொதுமக்கள் தங்களுக்கு முறையாக 100 நாட்கள் பணியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பணி கிடைக்காமல் அவதிப்படுவதாக சட்டமன்ற உறுப்பினரிடம் வேதனை தெரிவித்தனர் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்