திருத்தணி தாலுகா கனகம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாபு வணிக வளாக கடைகள் கட்டி உள்ளார், இதற்கு மின் இணைப்பு பெறுவதற்கு இதே கனகம்மா சத்திரம் பகுதியில் செயல்படும் மின்சாரத் துறையின் இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த உதவி பொறியாளர் புஷ்பராஜ் மின் இணைப்பு வேண்டுமென்றால் 6000 லஞ்சம் வேண்டும் என்று கூறியுள்ளார்,
பாபு 3 ஆயிரம் லஞ்ச பணத்தை உதவி பொறியாளர் புஷ்பராஜிற்கு அவரது Gpay க்கு பணத்தை அனுப்பி உள்ளார்,
மீண்டும் லஞ்ச பணம் 3000 ஆயிரம் வேண்டுமென்று பாபுவிடம் உதவி பொறியாளர் புஷ்பராஜ் கேட்டுள்ளார்
உடனடியாக பாபு திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி. எஸ். பி ராமச்சந்திர மூர்த்தி இவரிடம் புகார் கொடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய மூன்றாயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்து அனுப்பி உதவி பொறியாளர் புஷ்பராஜ் இடம் அவரது அலுவலகத்தில் வழங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி. எஸ். பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான ஐந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக ரூபாய் 3000 லஞ்ச பணம் பெற்ற உதவி பொறியாளர் புஷ்பராஜை கைது செய்தனர்
அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்