ALERT: திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை கொட்டும்; மக்களுக்கு எச்சரிக்கை

80பார்த்தது
ALERT: திருவள்ளூரில் இடி மின்னலுடன் மழை கொட்டும்; மக்களுக்கு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 9) திருவள்ளூர், சென்னை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை எச்சரித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி