வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி கூறி வீடியோ

68பார்த்தது
திருவள்ளூர்: 5 லட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நான் நன்றி கடன் பட்டவன் என காங்கிரஸ் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். வெயில் மழை என பாராமல் நடந்த 18-வது மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் கண்ட தனக்கு கடினமாக உழைத்து ஐந்து லட்சத்தி 72 ஆயிரத்து 155 வாக்குகளை பெற்று வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த காங்கிரஸ் தொண்டர்கள், திமுக கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மக்களை சந்தித்து பிரச்சனையை தீர்க்க இயன்றவரை பாடுபடுவேன் என உருக்கமாக காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வீடியோ பதிவை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி