*திருவேற்காட்டில் வீட்டில் இருந்த 103 சவரன் திருடு போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக தனது உறவினரை மூலம் உரிமையாளரே நகையை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. *
திருவேற்காடு அயனம்பாக்கம் ஈஜிபி நகரை சேர்ந்த ஜனார்த்தனன் (44) குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்றபோது தனது வீட்டில் இருந்த 103 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றதாக புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்தனர். ஜனார்த்தனன் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் வரை இழந்ததாகவும், அதனாலேயே வீட்டிலிருந்த நகைகளை விற்று அதனை சரி செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் நகை திருடு போனது தொடர்பாக கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், தனது உறவினர் உறவினரான வடபழனியை சேர்ந்த தியாகராஜன் (38) என்பவர் வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.