அரசியல் கட்சி விளம்பர பேனர் விழுந்து இளைஞர் படுகாயம்.

68பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை பஜார் பகுதியில் புரட்சி பாரதம் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் அந்த கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தி நினைவு நாளுக்காக செப்டம்பர்- 2 ஆம் தேதி டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். ஒரு வார காலம் கடந்தும் அந்த டிஜிட்டல் பேனர் அகற்றப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சின்னம்மாபேட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் அவரது தாயாரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓரம் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் அவிழ்ந்து சந்தோஷ் தலையின் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அதிர்ஷ்டவசமாக பின்னால் இருந்து அவரது தாயார் எந்தவித காயம் இன்றி தப்பினார். இந்த டிஜிட்டல் பேனர் விழுந்ததில் சந்தோஷ் தலையில் காயம் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காவல்துறையின் தொடர்ந்து கவனக்குறைவு காரணமாக இது போல் டிஜிட்டல் பேனர்கள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதின் காரணமாக நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும் டிஜிட்டல் பேனர்கள் பல நாட்களாக அப்படியே இருப்பதின் காரணமாக சாலையில் சென்றவர்கள் தலையில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you