திருவள்ளூர்: நகராட்சியுடன் ஊராட்சி இணைப்பை கைவிடக் கோரி போராட்டம்

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமபுரம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம மக்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்து அரசு பேருந்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கார்த்திகேயபுரம் ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி