திருவள்ளூர் அருகே மின்வாரிய அலுவலகம் முன்பு மெழுகு வர்த்தி கைகளில் ஏந்தி மின்வாரியத்தை கண்டித்து நூதன முறையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதி உற்று வருகின்றனர் இது குறித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அல்லலுற்று வந்தனர் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு தூக்கத்தை தொலைத்த பொதுமக்கள் இன்று மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து மணவாள் நகர் மேம்பாலம் அருகே உள்ள மின்வாரிய அலுவலர் நுழைவாயில் முன்பு பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி கண்டன கோசம் எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்