திருத்தணி: அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் தீ விபத்து

81பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரசு மாவட்ட மருத்துவமனையில் மருந்துகள் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து தீ பரவியுள்ளது. இதனைக் கண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு அவர்களுடன் இருந்த உறவினர்கள் அனைவரும் அவசரமாக வெளியேறியுள்ளனர். செவிலியர்களும் மற்றும் பயிற்சி கல்லூரி செவிலியர்களும் அவசரமாக அனைவரும் வெளியேறினார்கள். பயிற்சி கல்லூரி செவிலியர்கள் மொத்தமாக வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டனர். 

பயத்தில் இவர்கள் சென்றதால் அச்சமடைந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரும் மருத்துவமனை பகுதியில் அவர்கள் அனைவரையும் மருத்துவமனை நிர்வாகம் தங்கவைத்தனர். மருத்துவமனை உள்பகுதியில் குளிர்சாதனப்பெட்டி தீ பற்றி எரிந்த பகுதியில் மின்சாதன பெட்டியில் தீயணைப்பு கருவியை வைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர், ஊழியர்கள் தீயை அணைத்தனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்தனர். இதன்பிறகு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மின்சாதன வயர் மற்றும் குளிர்சாதன பெட்டி எரிந்த பகுதியில் கடும் புகைமூட்டம் இருந்ததால் கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதியில் இருந்த கண்ணாடிக் கதவினை உடைத்து புகை வெளியேறுவதற்கு வழிவகை செய்தனர்.

தொடர்புடைய செய்தி