பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையம்

861பார்த்தது
பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையம்
திருவாலங்காடு ஒன்றியம் தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், அமைந்துள்ளது சின்னம்மாபேட்டை கிராமம்.

இங்கு திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளதால், 24 மணிநேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. தினமும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சின்னம்மாபேட்டைக்கு வந்து செல்வர்.


டாஸ்மாக் உள்ளதால் குடிமகன்களின் தொல்லை, கஞ்சா வாலிபர்களின் தொடர் அட்டகாசம் உள்ளதால், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சின்னம்மாபேட்டையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், திறந்த வேகத்தில் ஒரு மாதமாக காவலர்கள் வராத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

இதனால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி