மாடு மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.

946பார்த்தது
மாடு மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.
திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமணி, 57.

இவர், கடந்த 5ம் தேதி திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி தன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பட்டரைபெரும்புதுார் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்தபோது, இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பாலமணி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி