உடற்பயிற்சி கூடத்தில் பெண்களுக்கு தனி நேரம்

57பார்த்தது
உடற்பயிற்சி கூடத்தில் பெண்களுக்கு தனி நேரம்
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், உடற்பயிற்சி கூடம், கடந்த ஆண்டு, ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி கூடத்தில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, மாணவ - மாணவியர், பொதுமக்களுக்கு உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மணி நேரத்திற்கு பயிற்சி கட்டணமாக, ஒரு மாதத்திற்கு பள்ளி மாணவர்களுக்கு 236, கல்லுாரி மாணவர்களுக்கு, 295 ரூபாய், பொதுமக்களுக்கு 472 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை 6: 00 மணி முதல், 9: 00 மணி வரை, மற்றும் மாலை 4: 00 மணி முதல், இரவு 7: 00 மணி வரை, ஆறு ஷிப்ட்களாக உடற்பயிற்சி கூடத்தில், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண்களுக்கு மட்டும் பிரத்யேகமாக தினமும், காலை 10: 00 மணி முதல், மதியம் 12: 00 வரை, உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு மணி நேர பயிற்சியில், 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பயிற்சியில் மாணவ - மாணவியர், பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி