குடியிருப்பு பகுதியில் மாவு மில்லை மூடக்கோரி தற்கொலை முயற்சி

83பார்த்தது
குடியிருப்பு பகுதியில் மாவு மில்லை மூடக்கோரி தற்கொலை முயற்சி
சின்னம்மாபேட்டை ஊராட்சியில் வசித்து வருபவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பாபு. இவரது மனைவி யசோதா என்பவர் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் மாவு அரைக்கும் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. மாவு அரைக்கும் போது இதிலிருந்து வரும் சத்தம் அதிகப்படியாக இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் நிம்மதியாக வசிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாவு மில்லை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாவு மில் அமைந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள குடியிருப்பு வாசி ஏழுமலை தேவகி ஆகியோர் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்திருந்தனர். அந்த புகார் மனுவில் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் மாவு மில் இருப்பதாகவும் இதிலிருந்து வரும் சத்தத்தால் அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் நிம்மதியாக தூங்க முடிவதில்லை என்றும் மேலும் குழந்தைகள் நிம்மதியாக படிக்க முடியவில்லை என்றும், மிகவும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அதிகப்படியான சத்தம் வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேவகியின் கணவர் ஏழுமலை ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி