இரு சக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

80பார்த்தது
மீஞ்சூர்.
ரயில் நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சிறிய வகை லாரி மோதி உயிரிழப்பு. சாலையில் உயிர் இழக்கும் பலரின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் நபருக்கு அதே போன்று சாலையில் உயிரிழந்த பரிதாபம்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் பிரதான சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ லாரியை பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியதில் பின்னால் லாரியின் அடியில் விழுந்தவர் தலை நசங்கி சாவு.

பொன்னேரி சின்னக்காவனம் பகுதியை சேர்ந்த அஜித் வயது 22 தந்தையின் பெயர் மாரி தாயின் பெயர் மஞ்சுளா. தாய் தந்தையர் இருவரும் தற்பொழுது இல்லை என்று கூறப்படுகிறது. சாலையில் விபத்தில் இறக்கும் நபர்களையும் வேறு சில அசம்பாவிதத்தில் இறக்கும் நபர்களின் உடல்களை எடுத்து அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவது. இறப்பில் மேளம் அடிப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டு அந்த கடையிலேயே தங்கி விடுவது தான் அஜித்தின் வேலை.

விபத்தில் இறந்த பலரின் உடலை அப்புறப்படுத்திய நபரின் உடல் அதேபோன்று விபத்தில் சாலையில் இருந்ததை பார்த்து அவரின் சக நண்பர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து காரணமாக மீஞ்சூர் சாலையில் போக்குவரத்து சற்று மந்தமாக இருந்தது. விபத்தில் உயிரிழந்த அஜித்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி