மீன்வள கல்லூரியில் ₹2 கோடி கையாடல் ஊழியர்கள் இருவர் கைது

75பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீன்வள கல்லூரியில் ₹2கோடியே 27 லட்சம் கையாடல் செய்த புகாரில் தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அண்மையில் கல்லூரி நிர்வாகத்தினர் வரவு செலவு கணக்குகளை பார்த்த போது அதில் ₹2 கோடியே 27லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. கல்லூரி நிர்வாகம் சார்பில் வங்கி கணக்குகளை பராமரித்து வந்த முன்னாள் தற்காலிக ஊழியர் மோகன், தற்போதைய தற்காலிக ஊழியர் ஆகாஷ் இருவரும் இணைந்து மோசடியாக ஆவணங்களை தயார் செய்து போலி கையெழுத்திட்டு பண மோசடி செய்தது உறுதியானது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ஜெயசகீலா அளித்த புகாரின் பேரில் பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கல்லூரியில் இருந்து ₹2கோடியே 27 லட்சம் கையாடல் செய்த புகாரில் மோகன், ஆகாஷ் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி