டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணைந்து நடத்தும் தேசிய அளவிலான. “மாறிவரும் காலநிலையில் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலை நிறுத்துதல்: நெகிழ் திறம், தணிப்பு மற்றும் தகவமைவு உத்திகள்” என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கரங்கு நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக
விவேக் குமார் பி யாதவ் இந்திய வனப்பணி (இ வ. ப) தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான செயற்பணி உதவி செயற்பணி இயக்குனர் கலந்துகொண்டு கருத்தரங்கின் விழா மலரை வெளியீட்டு மாணவர்களிடையே உரையாற்றினார்
நிகழ்ச்சியில் பேசிய விவேக் குமார் பி யாதவ் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெடுப்புக்கள் மற்றும் மாறிவரும் காலநிலையில் கடல் நீர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மீன்வள கல்லூரி மாணவர்கள் தங்கள் பங்களிப்புடன் புதிய தொழில் நுட்பங்கள் புதிய கண்ணுபிடுப்பு கள் மூலம் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலை நிறுத்துத தயாராக வேண்டும் மேலும் நெகிழ் திறன், தணிப்பு மற்றும் தகவமைவு உத்திகளை கையாளுதல் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கில் காலநிலை மாற்றம் சம்பந்தமான துறை சார் வல்லுநர்கள் இதில் மீன்வள அறிவியல் கல்வி மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.