செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை பேருந்து நிறுத்தம் அருகில் சாலை ஓரம் இறந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? சாலையை கடக்கும் போது உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.