தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

68பார்த்தது
தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை வளசரவாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கம் முரளி கிருஷ்ணா நகர் சாலையைச் சேர்ந்தவர் கமலி (38). இவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி இரவு தனது டியோ மாடல் இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார். காலையில் பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கமலி புகார் அளித்தார். புகாரின்படி, வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதையடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட, சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (19) மற்றும் பட்டூர் சின்ன பனிச்சேரி பகுதியைச் சேர்ந்த சாய்சரண் (19) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் யுவராஜ் மீது ஏற்கனவே மாதவரம், சூளைமேடு, அரும்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி