மதுரவாயல் அருகே ஆட்டோமொபைல் நிறுவனத்தில் சுமார் 30 டன் உதிரிபாகங்கள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் உதயகுமார் (32). இவர் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அண்மையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள கிடங்கில் உள்ள உதிரி பாகங்களை கணக்கிட்டு பார்த்தபோது சுமார் 30 டன் உதிரிபாகங்கள் காணாமல் போய் இருப்பது உதயகுமாருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே நிறுவனத்தில் கிடங்கு பொறுப்பாளராக இருந்த விமல் குமார் மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. லாரி மூலம் மொத்தம் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள 29. 7 டன் உதிர் பாகங்களை அவர்கள் திருடியுள்ளனர்.
இதையடுத்து விமல் குமார் மற்றும் சதீஷ் குமார் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1044 கிலோ உதிரி பாகங்கள், ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திருட்டு சம்பவத்தில் மேற்பார்வையாளர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.