திருவள்ளூர் மாவட்டம்,
சோழவரம் பிடிஓ அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள நல்லூர் ஊராட்சியினை அதன் அருகே அமைந்துள்ள பாடியநல்லூர் ஊராட்சியுடன் இணைத்து இரண்டையும் சேர்த்து பேரூராட்சியாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டது. நல்லூர் ஊராட்சியை பாடியநல்லூர் ஊராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராம ஊராட்சியை பாடியநல்லூர் ஊராட்சியுடன் இணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்துவதால் 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். 100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி கிராமத்தில் 45000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் திட்டம் பறிபோனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார் தெரிவித்தனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிடுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது