தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டை, அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் திருவள்ளூர் மாவட்ட குழுக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செரிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்த கோறரியும் கண்டன ஆர்ப்பாட்டம் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் டிவிஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது . இதில் சிபிஎம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி. துளசிநாராயணன், சிபிஎம் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எம். சம்பத், மாவட்டத் துணைத் தலைவர் பி. ரவி, எல்லாபுரம் வட்டார செயலாளர் எம். பழனி, மாவட்டக்குழு ஏ. மாரிமுத்து, எல்லாபுரம் வட்டார பொருளாளர் வி. வாசுதேவன் மற்றும் சிபிஐ நிர்வாகிகள் விவசாயிகள் மாவட்ட செயலாளர் ஜெ. அருள், மாவட்ட தலைவர் என். ஜீவா, மாவட்டத் துணைத் தலைவர்கள் பி. செங்கல்வராயன், கே. மணிகண்டன் , திருவள்ளூர் வட்டார செயலாளர் கே. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி