கும்மிடிப்பூண்டி: முன்னாள் பிரதமர் பிறந்தநாள் விழா

74பார்த்தது
நல்லாட்சி தின உறுதிமொழியை ஏற்று பாஜகவினர் பொதுமக்களுடன் இணைந்து
பாரதரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்

பொதுமக்களுக்கு அறுசுவை உணவு மரக்கன்றுகள் வழங்கியும் செல்வமகள் திட்டத்தில் 25 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்

திருவள்ளூர் மாவட்டம் கண்ணிகை பேர் கிராமத்தில்
பாரத ரத்னா முன்னால் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
பொதுமக்களுடன் இணைந்து பாஜக மாவட்டத் தலைவர் செந்தில் குமார்
நல்லாட்சி தின உறுதிமொழியை ஏற்றுகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அறுசுவை உணவு வழங்கியும் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்
இதே போன்று கும்மிடிப்பூண்டியில் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
அறுசுவை உணவும் மரக்கன்றுகள் வழங்கியும் பொதுமக்களுக்கு செல்வ மகள் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் 25 பேருக்கு வங்கி கணக்கினை துவக்கி தந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி