கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத்

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தன கோபாலகிருஷ்ண
கோயில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த மாதம் ஜனவரி 27ம் தேதி கோவிலை இடித்து முழுமையாக அகற்றப்பட்டன, புல்லரம்பாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு
வந்த நிலையில் அந்த கோவில் இடிக்கப்பட்ட இடத்தின் அருகே அப்பகுதி சார்ந்த முக்கிய கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 1 சென்ட் பட்டா நிலத்தை வாங்கி
ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத, ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ண, ஸ்ரீ சந்தான மற்றும் விநாயகர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளராக
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், புல்லரம்பாக்கம் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டார்.
பொது மக்களே பல இடங்களில் தாங்கள் வழிபாட்டுக்காக இத்தகைய கோயில்களை அமைத்து வருவதாகவும், அத்தகைய கோயில்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி
அகற்றப்படும் போது அறநிலையத்துறை மௌனம் காப்பது ஏன் என்றும்,
அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி