பொன்னேரி பாதாள சாக்கடை சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை ஆரணி ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திட்டத்தை செயல்படுத்தினால்
ஆற்று நீர் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிப்பு விவசாய பாசனதனதிற்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரி நகராட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக
அமைக்கப்பட்டு வந்த
பாதாள சாக்கடை திட்டத்தில்
சுமார் 7, 000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில்
இருந்து வெளியேரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஆலாடு அருகே ஆரணி ஆற்றில் கலக்கும் திட்டத்திற்கு ஆலாடு கிராம பொதுமக்கள் கடந்த ஆறு மாத காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது
விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆரணி ஆற்று நீரை சுத்திகரிக்கப்பட்ட நீர் என பாதாள சாக்கடை கழிவு நீரை கலக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.